Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரத்தான் வாழ்க்கைக்கு ஒரு சிறிய முற்றுப்புள்ளி – லாக்டவுனால் மகிழ்ச்சியான ராஷ்மிகா மந்தனா!

Webdunia
சனி, 30 மே 2020 (07:35 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா லாக்டவுனால் கிடைத்த மகிழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் லாக்டவுன் காலங்களில் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேசிய அவர், லாக்டவுன் நாட்களால் அடைந்த மகிழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.

அதில் ‘என் 18 வயதில் இருந்து வாழ்க்கை ஒரு மாரத்தான் ஓட்டத்தைப் போல இருந்தது. போட்டி முடிந்தது என நினைக்கும் போதெல்லாம், மீண்டும் தொடங்கிவிடும். இதை நான் ஒரு புகாராகக் கூறவில்லை. இத்தனை நாட்கள் நான் வீட்டில் இருந்ததே இல்லை. பள்ளிப்பருவம் தொடங்கி உயர்கல்வி முடிக்கும் வரை விடுதியில்தான் தங்கியிருந்தேன். இந்த ஊரடங்கில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நான் வீட்டிலேயே இருக்கிறேன். நாங்கள் யாரும் இப்போது வேலையைப் பற்றி பேசுவதே இல்லை. நான் இத்தனை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’குபேரா’ புரமோஷனில் ஒரே ‘கூலி’ கேள்வி தான்.. நாகார்ஜூனாவால் தனுஷ் அப்சேட்..

விஜய் படத்தை இயக்கியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வெங்கட்பிரபு.. கைவிரித்த எஸ்கே..!

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் –அஜித்குமார் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments