Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் என் கனவில் வந்தார்… என் மகனாக பிறப்பார் – சர்ச்சையைக் கிளப்பிய நடிகை!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (08:13 IST)
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது கனவில் வந்து மகனாக பிறப்பார் என்று கூறியதாக தெரிவித்த ராக்கி சாவந்தை ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பாலிவுட்டின் பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையான ராக்கி சாவந்த், சுஷாந்த் மரணம் குறித்து ‘சுஷாந்த் என் கனவில் வந்து எனக்கு மகனாக பிறக்கப்போவதாக சொன்னார்’ என சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த ’இந்த சூழ்நிலையிலும் இப்படி பேச நீங்கள் வெட்கப்படவேண்டும்’ என கமெண்ட்டுகளில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு மாதத்திற்கு படத்தை வெளியிட முடியாது! வீர தீர சூரனுக்கு தடை! - அதிர்ச்சியில் தியேட்டர்கள், ரசிகர்கள்!

ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லாம் காணோம்? - Avengers Doomsday அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

அடுத்த கட்டுரையில்
Show comments