Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் பார்த்தப்புறம் அதெல்லாம் நான் செய்யுறதே இல்லை… ரஹ்மான் சிலிர்ப்பு!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (15:28 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்துக்கு இசையமைத்துள்ள ரஹ்மான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் “இந்த படத்தைப் பார்த்த பின்னர் நான் ஓடிடிகளில் வரும் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். நமது வரலாற்றின் பெருமையை சொல்லும் படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கங்கனாவின் ‘எமர்ஜென்ஸி’ படத்துக்குக் கிடைத்தது சென்சார் சான்றிதழ்!

GOAT படம் SAC கதைன்னு ரிலீஸுக்குப் பிறகுதான் தெரிந்தது… வெங்கட்பிரபு பதில்!

‘சூர்யா 44’ கேங்ஸ்டர் படம் இல்லை… இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தகவல்!

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட ரன்னிங் டைம் அப்டேட்!

நகைச்சுவை பட்டாளத்தின் இளமை துள்ளும் நகைச்சுவை திரைப்படம் "கா க் கா"

அடுத்த கட்டுரையில்
Show comments