Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய புஷ்பா படப்பிடிப்பு… காடுகளில் முகாமிட்ட படக்குழு!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (11:45 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் தொடங்கியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை  இயக்குனர் சுகுமார் இயக்கி வந்தார். இதற்கிடையில் கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படம் ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தாமதமானது.

இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது புஷ்பா படக்குழு. மாரேடுமில்லி காடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் முக்கிய காட்சிகளை அங்கே படமாக்க உள்ளனர். இந்த படம் பிரம்மாண்டமாக 5 மொழிகளில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments