Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு நேர வில்லனாக முடிவெடுத்த பிரசன்னா

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (20:07 IST)
‘திருட்டுப்பயலே 2’ படத்துக்கு கிடைத்துள்ள வெற்றியால், வில்லனாகத் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளாராம் பிரசன்னா.

 
சுசி கணேசன் இயக்கிய ‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசன்னா. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த பிரசன்னாவுக்கு அப்படியொன்றும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. 
 
ஆனால், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படத்தில் வில்லனாக நடித்தார் பிரசன்னா. அந்தப் படம் மட்டுமின்றி, அவருடைய கேரக்டரும் பாராட்டப்பட்டது. அப்போதே வில்லனாகத் தொடர்ந்து நடித்திருந்தால், இன்றைக்கு முன்னணி நடிகராக இருந்திருப்பார் பிரசன்னா.
 
ஆனால், அவர் ஹீரோவாகவே தொடர, நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறார். இந்நிலையில், சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் மறுபடியும் வில்லனாக நடித்துள்ளார் பிரசன்னா. இது அவருக்கு 25வது படம். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டுள்ளதால், இனிமேல் வில்லனாகத் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments