பணத்திற்காக ஆபாச படங்களில்..? இப்போ தலைவர் பதவிக்கு ஆசையா? - நடிகை ஸ்வேதா மேனன் மீது பகீர் புகார்!

Prasanth K
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (10:22 IST)

மலையாளத்தில் பிரபல நடிகையான ஸ்வேதா மேனன் மீது அளிக்கப்பட்டுள்ள ஆபாச திரைப்பட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வந்தவர் ஸ்வேதா மேனன். சால்ட் அண்ட் பெப்பர் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ள நிலையில், இவரது கரம் என்ற புதிய படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகையாக மட்டுமல்லாமல் நடிகர் சங்க செயல்பாடுகளிலும் ஈடுபாட்டு காட்டி வரும் ஸ்வேதா மேனன், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா (AMMA) சங்கத்தின் நிர்வாகக் குழு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் மெனச்சேரி மார்ட்டின் என்ற சமூக ஆர்வலர் எர்ணாகுளம் சிஜேஎம் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார். ஸ்வேதா மேனன் பணத்திற்காக ஆபாசப்படங்கள், விளம்பரங்களில் நடித்ததாக புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி ஆபாச தடுப்பு சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அவரது நடிகர் சங்க தேர்தல் போட்டியில் பகிரங்கமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments