Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிந்தது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு: ஜெயம் ரவி டுவிட்

முடிந்தது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு: ஜெயம் ரவி டுவிட்
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:18 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே 
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார் 
 
பொன்னியின் செல்வன் தயாரிக்கும்போதே இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் தயாரிக்கப்பட்டு வந்தது என்றும் ஆனால் அவை பிரித்து ஒவ்வொரு பாகமாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம் ரவி தற்போது இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷ் தொடங்கும் பூமித்ரா… சருமப் பராமரிப்பு பொருட்கள் விற்பனை!