Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன்… ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது- அறிவித்த காஸ்ட்யூம் டிசைனர்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (08:07 IST)
மணிரத்னம் கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடத்தி வந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து நடிகர்களையும் வைத்து ஐதராபாத்தில் அரங்கு அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது அங்கு படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஏலா ஏகானி அறிவித்துள்ளார். இதையடுத்து ஜெய்ப்பூரில் சில காட்சிகளை படமாக்க உள்ளாராம் மணிரத்னம். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments