Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சுப்புராஜின் 'பீட்சா' மற்றும் 'பேட்ட' படங்களின் அபூர்வ ஒற்றுமை

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (21:17 IST)
விஜய்சேதுபதி நடித்த 'பீட்சா' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதனையடுத்து 'ஜிகர்தண்டா', 'இறைவி' மற்றும் 'மெர்க்குரி' ஆகிய மூன்று படங்களை இயக்கிவிட்டு அதன் பின்னர் தற்போது ஐந்தாவது படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'பேட்ட' படத்தை இயக்கி வந்தார்.

இந்த நிலையில் இன்றுடன் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது பொங்கல் திருநாளில் இந்த படம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு முடிந்த இதே அக்டோபர் 19ஆம் தேதி தான் அதாவது 2012ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தான் கார்த்திக் சுப்புராஜின் முதல் படமான 'பீட்சா' வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படம் வெளியான அதே தினத்தில் சூப்பர் ஸ்டாரின் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ளார் என்பது தற்செயலாக அமைந்த ஒரு அபூர்வ ஒற்றுமை ஆகும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments