Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போகும் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் – பின்னணி என்ன?

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:36 IST)
இயக்குனர் பார்த்திபன் அடுத்ததாக இயக்கும் இரவின் நிழல் என்ற படம் ஒரே ஷாட்டாக எடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் நடக்க இருந்தது. ஆனால் இப்போது அதை பார்த்திபன் தள்ளி வைத்துள்ளார். ஏனென்றால் படக்குழுவினருக்கு அவர் மொத்தமாக 35 நாட்கள் ஒத்திகைக் கொடுக்க உள்ளாராம். மேலும் தான் நடிக்க ஒத்துக்கொண்ட படங்களையும் நடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இரவின் நிழல் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments