Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘களவாணி’க்கு ‘நோ’ சொன்னாரா ஓவியா?

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (14:53 IST)
‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஓவியா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 



 

விமல் – ஓவியா நடிப்பில், சற்குணம் இயக்கத்தில் வெளியான படம் ‘களவாணி’. 2010ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான், ஓவியாவுக்கு முதல் தமிழ்ப் படம். அதன்பிறகு பல படங்களில் அவர் நடித்தாலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் அவரை நிறைய பேருக்குப் பிடிக்க ஆரம்பித்தது. ‘ஓவியா ஆர்மி’யைக் கூட ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில், ‘களவாணி’யின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தார் சற்குணம். வெற்றிக்காகக் காத்திருக்கும் விமல் கதையைக் கூட கேட்காமல் ஓகே சொல்ல, ‘கதை கேட்டுவிட்டுத்தான் முடிவு சொல்வேன்’ என்றிருக்கிறார் ஓவியா. காரணம், முன்பு போல கண்ட கண்ட படங்களில் நடிக்காமல், தனக்கிருக்கும் ரசிகர்களைத் தக்க வைத்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். அதன்படி, ‘களவாணி 2’ கதையைக் கேட்ட ஓவியாவுக்கு, அவரின் கேரக்டர் பிடிக்கவில்லையாம். எனவே, அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேன் இந்தியா சினிமா என்ற அசிங்கமான கலாச்சாரத்தால் நல்ல சினிமா குறைந்துள்ளது- செலவராகவன் ஆதங்கம்!

‘நல்ல படம் பறவை போல… கண்டம் கடந்தும் நேசிக்கப்படும்’- ஜப்பானில் ரிலீஸ் ஆகும் மாநாடு குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

அஜித் சார் இருக்கும் போது எதுக்கு டி ஏஜிங்.. இளமையான தோற்றம் குறித்து ஆதிக் பகிர்ந்த தகவல்!

தொடரும் ‘இட்லி கடை’ நட்பு.. அருண் விஜய்க்காக குரல் கொடுத்த தனுஷ்!

பிரசாந்திடம் அந்த நல்ல குணம் உள்ளது.. நான் அவரோடு மட்டுமே நட்பில் உள்ளேன் -புகழ்ந்த பிரபல நடிகை

அடுத்த கட்டுரையில்
Show comments