இரண்டு பக்கத்தையும் பார்க்கவேண்டும்… தெருநாய்ப் பிரச்சனை குறித்து மிஷ்கின் கருத்து!

vinoth
வியாழன், 4 செப்டம்பர் 2025 (09:28 IST)
கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு தலைப்புகளில் ஒன்றாக தெரு நாய்களின் தாக்குதல் அமைந்துள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி பெரியளவில் கவனம் ஈர்த்தது.

அதில் தெருநாய் ஆதரவாளர்கள் மற்றும் அதற்கு எதிரானவர்கள் என்ற பிரிவில் நடந்த உரையாடலில் தெருநாய்களுக்கு ஆதரவாகப் பேசவந்தவர்கள் உளறிக் கொட்டி கேலிக்குள்ளானார்கள். அதிலும் படவா கோபி மற்றும் அம்மு போன்ற சின்னத்திரை நடிகர்கள் அபத்தமாகப் பேசி ட்ரோல்களுக்கு ஆளானார்கள். அவர்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் வரவேயில்லை என்பதுதான் நாய் ஆதரவாளர்களின் குரலாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் இதுபற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் “மனிதர்களுக்குக் கருத்தடை செய்ததை போல நாய்களுக்கு செய்ய முடியவில்லை என்பதுதான் இந்த பிரச்சனைகளுக்குக் காரணம்.  உயிர்வதைக் கொடுமையானது. அதே நேரத்தில் நாய்களால் வரும் பிரச்சனைகளையும் பார்க்கவேண்டும். இந்த விஷயத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments