Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்ரூமை ஆபீஸாக்கிய கங்கனா!? – நோட்டீஸ் ஒட்டிய மும்பை மாநகராட்சி!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (09:56 IST)
மகாராஷ்டிராவை மினி பாகிஸ்தான் என கங்கனா ரனாவத் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது மும்பை வீட்டில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிராவை பாதுகாப்பற்ற பகுதி என்றும், மினி பாகிஸ்தான் என்றும் நடிகை கங்கனா ரனாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவ்வாறு பேசியதற்கு கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கங்கனாவிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசின் ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கங்கனாவின் மும்பை வீட்டில் மாநகராட்சி நோட்டிஸ் ஒட்டியுள்ளது. அதில் கங்கனா ரனாவத் தனது மாளிகையில் அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், கங்கனா ரனாவத் வீட்டில் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும், மேலும் சில புதிய கழிவறைகளை கட்டியுள்ளதாகவும், வீட்டிலேயே அலுவலகமும் செயல்பட அனுமதி பெறவில்லையென்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் கங்கனா ரனாவத்தை அச்சுறுத்துவதற்காக இது போன்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக கங்கனா தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி செய்த நடிகர் சிம்பு! எத்தனை லட்சம் தெரியுமா?

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

அடுத்த கட்டுரையில்
Show comments