Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் பிறை 40 ஆண்டுகள்: இளையராஜாவுக்கு நன்றி கூறிய தயாரிப்பாளர்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (18:35 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான திரைப்படம் மூன்றாம் பிறை
 
இந்த படத்திற்காகத்தான் கமலஹாசனுக்கு முதல் முறையாக தேசிய விருது கிடைத்தது என்பதும், இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 1982ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் 40 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் தியாகராஜன் அவர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மூன்றாம் பிறை வெளி வந்து 40 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த வெற்றி முக்கிய காரணம் இந்த படத்தின் இசை மற்றும் பின்னணி இசை என்றும் அந்த அளவுக்கு அந்த படத்தின் பாடல்கள் சாதனை படைத்தது என்றும் கூறுகிறார்
 
40 ஆண்டுகள் ஆகியும் இன்றும் இப்படத்தில் உள்ள பாடல்களின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றுதான் கூற வேண்டும் என்றும் எங்கள் நிறுவனத்தின் வெற்றி திரைப்படத்திற்கு தாங்கள் இட்ட இந்தப் பிள்ளையார் சுழியே காரணம் என்றும் இதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாவும் தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments