Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில் பார்ட்டி வைத்த 'ஆளப்போறான் தமிழன்'

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (17:36 IST)
ஒருபக்கம் தமிழகம் கடந்த ஐந்து நாட்களாக கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் இடம்பெற்றுள்ள 'மெர்சல்' திரைப்படத்தின் சக்சஸ் பார்ட்டி நேற்று இரவு நடந்துள்ளது.


 


விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நல்ல வெற்றி பெற்று வசூலை குவித்த நிலையில் நேற்றிரவு விஜய்க்கு சொந்தமான ஈசிஆர் சொகுசுவிடுதியில் சக்சஸ் பார்ட்டி நடந்தது. இந்த பார்ட்டியில் இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்றிரவு முழுவதும் சென்னை மக்கள் கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தை ஆள்வார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் விஜய் சக்சஸ் பார்ட்டி வைத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மெர்சல் திரைப்படம் உண்மையான வெற்றியை பெற்றிருந்தபோதிலும் பார்ட்டி வைக்க இதுதான் சரியான் நேரமா? என்று பலர் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments