Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 நாளில் முடியும் உதயநிதி மாரி செல்வராஜ்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:57 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 40 நாளில் முடிய உள்ளதாம்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார். ஆனால் இப்போது இந்த படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

அதற்குக் காரணம் மாரி செல்வராஜ் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலினை இயக்க முடிவு செய்ததுதானாம். இந்த ஆண்டு இறுதியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பஹத் பாசிலிடம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஒரே கட்டமாக 40 நாளில் படமாக்கி முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments