Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தாரா 2 படம் வருவது உறுதி… தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:53 IST)
காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வருவது உறுதி என விஜய் கிரகந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ள காந்தாரா திரைப்படம், 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக லாபம் சம்பாதித்த படமாக காந்தாரா அமைந்துள்ளது எனப் பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் ‘காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும். அது படத்தின் தொடர்ச்சியா இல்லை கதையின் முன் பகுதியா என்பதை படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியுடன் விவாதித்த பின்னர் அறிவிப்போம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

பாலிவுட் ஹீரோயின் ஹூமா குரேஷியின் க்யூட் லுக்ஸ்!

கூலி படத்துக்கு என் சம்பளம் ‘லியோ’வை விட இரண்டு மடங்கு… ஓப்பனாக சொன்ன லோகேஷ்!

தெளிவானத் திட்டமிடலுடன்தான் படமாக்கினோம்… ஸ்டண்ட் கலைஞர் மரணம் குறித்து பா ரஞ்சித் விளக்கம்!

லகான் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments