Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மீது ஆசிட் ஊற்றிய நபர் – மனம் திறந்த நடிகையின் சகோதரி !

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (12:39 IST)
சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான சப்பாக் படம் ஆசிட் வீச்சு சம்பவங்கள் பற்றிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இது பற்றி விவாதத்தை எழுப்பும் விதமாக தற்போது சப்பாக் எனும் பாலிவுட் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து தன் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் பற்றி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி, ரங்கோலி சந்தல் ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அவரது கட்டுரையில் ‘என் மீது ஆசிட் வீசிய நபரின் பெயர் அவினாஷ் ஷர்மா. நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். ஒரு நாள் அவர் என்னிடம் காதலைத் தெரிவித்தார். நான் அவர் காதலை ஏற்கவில்லை. அதனால் அதிருப்தியடைந்த அவர் என்னை ஏதாவது செய்யவேண்டும் என நண்பர்களிடம் கூறியுள்ளார். அதனை நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பின் ஒருநாள் என் அறைக்கு யாரோ என்னை பார்க்க வந்திருப்பதாக சொல்ல நான் சென்ற போது என் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டது. ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிவிட்டது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பிரேமலு 2 படம் தாமதமாக மமிதா பைஜுதான் காரணமா?

துருவ நட்சத்திரம் விடிவு காலம் பிறந்ததா?... வெளியான ரிலீஸ் தேதி அப்டேட்!

தூதுவிட்ட பிரம்மாண்ட இயக்குனர்… கண்டுகொள்ளாத AK.. பின்னணி என்ன?

என் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.. யேசுதாஸ் மகன் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments