Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிக் கட்டத்தில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்… ஜெயம் ரவிக்கு வந்த சிக்கல்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:41 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகர்கள் எல்லாம் தங்கள் கெட்டப்பை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளனராம்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இந்த படத்துக்காக எல்ல நடிகர்களும் நீண்ட முடி மற்றும் தாலி வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அப்படியே முடித்த கையோடு அவர்கள் எல்லாம் தங்கள் மற்ற படங்களில் நடிக்க செல்கின்றனர். இந்த படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி அடுத்து இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்காக முடியை வெட்டி கெட்டப்பை மாற்ற வேண்டுமாம்.

ஆனால் நீள முடியுடன் ஜெயம் ரவி இயக்குனர் அகமது இயக்கும் ஒரு படத்தில் பாதிக் காட்சிகள் நடித்துள்ளாராம். அதனால் இப்போது முடிவெட்டி கெட்டப் மாற்றினால் மீண்டும் அகமது படத்துக்காக நீள முடி வளர்க்க வேண்டுமாம். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் ரவி யோசனையில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments