Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவியின் பூமி கதையும் சுட்டதுதானா? பாக்யராஜுக்காக காத்திருக்கும் பஞ்சாயத்து!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (17:59 IST)
இயக்குனர் லஷ்மண் இயக்கியுள்ள பூமி படத்தின் கதை தன்னுடையது என்று ஒரு உதவி இயக்குனர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்ட நிலையில் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள், அதனை அடுத்து டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் உதவி இயக்குனர் ஒருவர் இந்த படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தனது முழுக்கதையும் கதாசிரியர்கள் சங்கத்தில் 2017 ஆம் ஆண்டே பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். கதாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் தனது மாமியார் மறைவு காரணமாக சில நாட்கள் அலுவலகத்துக்கு வராததால் அவருக்காக இந்த பஞ்சாயத்து இப்போது காத்திருக்கிறதாம். இதற்கு இடையில் புகார் கொடுத்த உதவி இயக்குனரைக் காப்பாற்றும் வேலைகளும் நடந்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments