Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தை இழுபறி: திரைத்துறையின் போராட்டம் நீடிக்குமா?

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (13:21 IST)
கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திரைத்துறையுலகினர், தியேட்டர் அதிபர்கள் ஆகியோர் தமிழக அரசின் அமைச்சர் , அதிகாரிகள் முன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் விரைவில் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு தயாரிப்பாளர் சங்கம் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் நீடிக்கும் என்று கூறியதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.
 
மேலும் திரைத்துறை நிர்வாகிகள் பேசும்போது அவர்களுடைய ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்வதால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும், அதிகாரிகள் கோபம் கொண்டதாகவும், இதனால் இந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவை நோக்கி செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments