Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைவிரித்த சூர்யா & சிவகார்த்திகேயன்… லாரன்ஸை வைத்து படம் இயக்கும் இயக்குனர் ரவிகுமார்!

கைவிரித்த சூர்யா & சிவகார்த்திகேயன்… லாரன்ஸை வைத்து படம் இயக்கும் இயக்குனர் ரவிகுமார்!
, புதன், 20 டிசம்பர் 2023 (07:39 IST)
தமிழ் திரையுலகின் முதல் முழுநீள டைம் ட்ராவல் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து இப்போது உருவாக்கி வரும் அயலான் படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதான். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளனர்.

இப்போது அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் பொங்கலுக்கு அந்த படம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து  சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் ரவிக்குமார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க இருந்தது. ஆனால் சூர்யா வரிசையாக மற்ற படங்களில் நடித்து வருவதால் அந்த படம் தொடங்குவது தாமதம் ஆகும் என சொல்லப்பட்டது.

அதனால் ரவிகுமார் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இன்னொரு படத்தை இயக்குனர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயனும் இப்போது பிஸியாக இருப்பதால் அந்த படமும் தொடங்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது. இதனால் இப்போது இயக்குனர் ரவிகுமார் ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அதற்கான திரைக்கதை பணிகள் அயலான் ரிலீஸுக்கு பிறகு தொடங்கும் எனத் தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கிய ஃபைட் கிளப்!.. அதிகாரப்பூர்வ வசூல் விவரம்!