Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அவர்களை தேடி போகவில்லை ..அவர்கள் தான் என்னை தேடி வந்தனர் - இளையராஜா

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (19:39 IST)
யாரையும் நம்பி நான் சென்னைக்கு வரவில்லை என்றும், கமல், ரஜினி போன்றவர்கள் தான் இசைக்காக என்னை  தேடி வந்தனர் என்றும், இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது ரஜினி கமல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
இளையராஜாவின் 75-ம் ஆண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமான விழா ஒன்று , சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி. ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா கூறியபோது,
 
கமல் மற்றும் ரஜினியை தேடி நான் போகவில்லை மாறாக அவர்கள் தான் என்னை தேடி வந்தனர் என்றும், மேலும் யாரையும் நம்பியும் நான் சென்னைக்கு வரவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினியும் கமலும் தான். இவர்களின் மவுசு தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதுமே பறந்துள்ளது. இவ்வளவு பிரபலமான இவர்களை நம்பி நான் வரவில்லை என இசைஞானி இளையராஜா  கூறியதால்,  ரஜினி மற்றும் கமல்  ரசிகர்கள் இளையராஜா மீது கோபங்களை கொட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments