Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைமாறிய சூர்யா – ஹரிப் படம் ! – பின்னணி என்ன ?

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (12:33 IST)
சூர்யா மற்றும் ஹரியின் கூட்டணியில் சன்பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த படம் இப்போது ஏ.வி,எம். நிறுவனத்திற்கு சென்றுள்ளது.

சூர்யா- ஹாரி காம்போவில் உருவான ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் தயாரிப்பாளர்களுக்க்கும் லாபம் கொடுத்தவை. மேலும் சூரியாவின் திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து அவரது மார்க்கெட்டை விரிவாக்கியவை. அதனால் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் மற்றுமொருப் படத்தை உருவாக்க சன்பிக்சர்ஸ் முயன்றது.

சூர்யாவும் ஹரியும் இதற்கு ஒத்துக்கொள்ள அந்த படம் சிங்கம் பட வரிசையின் நான்காவது பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது திடீரென சூர்யா- ஹரியின் அடுத்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்னெவென்றால் ‘சன் பிக்சர்ஸ் டீமுக்கு இயக்குனர் ஹரி சொன்ன கதையில் திருப்தி இல்லாததால் வேறு கதை தயார் செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சூர்யாவுக்கும் ஹரிக்கும் அந்த கதையேப் பிடித்துப் போக இப்போது ஏவிஎம் நிறுவனம் அந்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளது. இப்படத்துற்கு யானை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிலகாலமாக கோலிவுட்டில் நிலவிவரும் வியாபாரப் போட்டிக் காரணமாக ஏவிஎம் நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. தற்போது மீண்டும் அதிகளவிலான படங்களை தயாரிக்கும் முடிவில் களமிறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே சூர்யா ஏ.வி,எம் கூட்டணியில் உருவான அயன் படம் மிகப்பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா படத்தைத் தள்ளிவைத்த நித்திலன்.. மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘குபேரா’… எவ்வளவு தெரியுமா?

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் 90 கோடி ரூபாய்க் கேட்கும் சிக்கந்தர் தயாரிப்பாளர்… இது என்ன புதுசா இருக்கு!

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments