Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறு தணிக்கைக்கு செல்லும் அட்லீ படம்?

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (15:12 IST)
அட்லீ தயாரித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பலாமா என்று யோசித்து வருகின்றனர்.

 
 
அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. கமலிடம் உதவியாளராகப்  பணியாற்றியுள்ள ஐசக், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜீவா – ஸ்ரீதிவ்யா இருவரும் ஹீரோ – ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை, வருகிற 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருந்தனர்.
 
இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. யு சான்றிதழ் கிடைக்காததால், எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.
 
இன்னொரு பக்கம், ‘பாகுபலி-2’ இன்னும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். எனவே, படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பலாமா என்று யோசித்து வருகிறார்கள். அல்லது குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments