Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தொடங்குகிறது திருப்பதி பிரம்மோற்சவம்: சாலைகளில் மின்விளக்கு அலங்காரம்..!

Mahendran
வியாழன், 3 அக்டோபர் 2024 (11:56 IST)
நாளைய திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்க இருப்பதை அடுத்து, சாலைகளில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நாளை, அதாவது அக்டோபர் நான்காம் தேதி, பிரம்மோற்சவம் விழா தொடங்குவதாகவும், அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை முன்னிட்டு, கொடி கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி  ஏற்றப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. பிரமோற்சவம் விழாவை அடுத்து, திருப்பதி திருமலையில் வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டதாகவும், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்து, திருப்பதி மற்றும் திருமலை ஜெகஜோதியாக காட்சி அளித்து வருகிறது. திருப்பதி ரயில் நிலையம், தேவஸ்தான நிர்வாக அலுவலகம், திருச்சானூர் - திருப்பதி சாலை, சித்தூர் - திருப்பதி சாலை ஆகியவற்றில் மின் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால், நாளை முதல் 12ஆம் தேதி வரை கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.


Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்து: அமைச்சர் சுரேகா அதிரடி..!

'வேட்டையன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

கைதி 2 படத்தில் கார்த்தியுடன் இணையும் பிரபல ஹீரோ!

மண்ணைக் கவ்விய இந்தியன் 2… மூன்றாம் பாகத்தை ஓடிடியில் வெளியிட திட்டமா?

முட்டாள்தனமாகப் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என நினைப்பவர்களைப் பார்த்தால் அருவருப்பாக உள்ளது –நானி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments