Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிடாயின் கருணை மனு படத்தினை ஏன் இன்னும் தொலைக்காட்சிகளுக்கு விற்கவில்லை – இயக்குனர் கோபம்!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:43 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தினை ஏன் இன்னும் தொலைக்காட்சிகளில் விற்கவில்லை என அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் ரவீனா நடிப்பில் அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள் புதுமுகங்களே. எனினும் எதார்த்தமான திரைக்கதையாலும், நடிகர்களின் சிறப்பான நடிப்பாலும் அந்த திரைப்படம் கவனம் பெற்றது. ஆனாலும் 3 ஆண்டுகளாகியும் அந்த திரைப்படம் இன்னமும் எந்தவொரு தொலைக்காட்சி சேனலிலும் ஒளிபரப்பாகவில்லை.

இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா, தயாரிப்பு நிறுவனமான ஈராஸிடம் ‘ஏன் இன்னும் அந்த படத்தை எந்த வொரு சேனலுக்கும் விற்கவில்லை. உங்களுக்கு வேண்டுமானால் அது சிறிய பட்ஜெட் படமாக இருக்கலாம். ஆனால் அதில் பணியாற்றிய கலைஞர்களின் உழைப்பு விலைமதிப்பற்றது’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments