சினிமாக்காரர்கள் தவறு செய்தால் தேசத்துரோகிகள் போல பேசுகிறார்கள்… இயக்குனர் பேரரசு காட்டம்!

vinoth
செவ்வாய், 8 ஜூலை 2025 (13:47 IST)
போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சமீபத்து கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது.

ஸ்ரீகாந்த் மூலமாக கிருஷ்ணாவும் போதைப் பொருளைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமாக மேலும் பலர் திரையுலகில் போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் சிலரோ தமிழ் சினிமாவில் பெரும்பாலானவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று பரபரப்பாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு இதுபற்றி பேசும்போது “சினிமாக்காரர்கள் போதை பொருள் பயன்படுத்தி மாட்டினால் தேசத் துரோகம் செய்தது போல காட்டுகின்றனர். சமூகவலைதளங்களில் இருக்கும் நிறைய மிருகங்கள் வன்மத்தைக் கொட்டுகிறார்கள்.” என கோபமாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments