Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடையை விமர்சித்து கேவலமான பதிவு: ரகுல்பிரீத் சிங் பதிலடி

Webdunia
ரகுல்பிரீத் சிங் தமிழ் படங்களில் அறிமுகம் ஆனாலும் ஆந்திராவில் முன்னணி நடிகையாக உயர்ந்த பின்னே பிரபலம் ஆனார். அதன் பின்னர்  கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழில் பிரபலம் ஆனார்.
தற்போது மீண்டும் கார்த்தி ஜோடியாக தேவ், சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடிக்கிறார். 
 
நடிகை ரகுல்பிரீத் சிங் அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுப்பது வழக்கம். சமீபத்தில் காரில் இருந்து கவர்ச்சி  உடையில் அவர் இறங்கி வரும் புகைப்படம் வைரலானது. அந்த படத்தை பார்த்து பலர் இப்படி கேவலமான உடை அணியலாமா? பேண்ட் அணிய மறந்து விட்டீர்களா என்றெல்லாம் ரகுல் பிரீத் சிங்கை கடுமையாக விமர்சித்தனர், இந்நிலையில் ஒருவர் ரகுலை மிககேவலமாக பேசி மோசமான கருத்தை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
 
இதற்கு ரகுல்பிரீத் சிங் பதிலடி கொடுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–
 
"உன்னுடைய அம்மா காரில் இருந்து இறங்கி வந்தால் இப்படித்தான் பேசுவாயா. பெண்களை மதிக்க உன் தாயிடம் அறிவுரை கேள். அதன்படி  நடந்துகொள். உன்னைப் போன்றவர்கள் இருப்பது வரை பெண்கள் பாதுகாப்பாக வெளியே நடமாட முடியாது. பெண்கள் பாதுகாப்பு,  அவர்களுக்கு சம உரிமை வழங்குவது என்ற விவாதம் எல்லாம் உதவாது".
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்