Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹீரோ வேண்டாம்: யோகிபாபு

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (21:20 IST)
காமெடி நடிகர்களாக இருந்து ஹீரோவாக மாறிய நடிகர்கள் பெரிய அளவில் கோலிவுட்டில் வெற்றி பெற்றதில்லை. ஆனாலும் தொடர்ந்து காமெடி நடிகர்களுக்கு அவ்வப்போது ஹீரோ ஆசை வந்து கொண்டுதான் உள்ளது. கோலிவுட்டில் ஒரு காலத்தில் சந்தானம் காமெடியனாக இருந்தபோது அவர் நடிக்காத படமே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அவர் ஹீரோவான பின்னர் கிட்டத்தட்ட சந்தானத்தை ரசிகர்கள் மறந்தேவிட்டார்கள். 
 
இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. நயன்தாராவே அவருடைய நடிப்பை ரசித்து அவரை தன்னுடைய படங்களுக்கு சிபாரிசு செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
 
இந்த நிலையில் ஒருசில இயக்குனர்கள் யோகிபாபுவிடம் சென்று ஹீரோவுக்கான கதையை கூறியுள்ளனர். ஆனால் தெளிவாக இருக்கும் யோகிபாபு, கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹீரோ கேரக்டர் வேண்டாம், நான் கடைசி வரை காமெடியன் தான் என்று கூறி ஹீரோவுக்கான கதை சொல்ல வந்தவர்களை வழியனுப்பி வைத்துவிட்டாராம். சரியான முடிவை எடுத்துள்ள யோகிபாபு இன்னும் பல  வருடங்கள் கோலிவுட்டில் காமெடியனாக கொடிகட்டி பறப்பார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments