பணத்திற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்: தாடி பாலாஜி மனைவி

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (19:02 IST)
தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி அவரது மனைவி இருவரும் கலந்து கொள்கின்றனர். இந்த முயற்சியால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் தாடி பாலாஜி இருந்தும் நான் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்பது குறித்து அவரது மனைவி நித்யா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பாலாஜியுடன் மீண்டும் சமாதானமாகி சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை. அவர் திருந்திவிட்டேன் என்று பலமுறை கூறியதை கேட்டு ஏமாந்துவிட்டேன்.
 
எனக்கும் எனது மகளுக்கும் தற்போது பொருளாதார தேவை அதிகமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் அந்த தேவை பூர்த்தியாகும் என்று நினைக்கின்றேன். அதுமட்டுமின்றி எனது மகள் சம்மதித்ததால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். என்னை தேர்வு செய்த விஜய் டிவிக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாங்க எப்பவும் ஃபிரண்டுதான்!.. குஷ்புவுடன் கமல்ஹாசன்!. வைரல் போட்டோஸ்!..

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

பைசன் நாயகி அனுபமாவின் அட்டகாசமான புகைப்படத் தொகுப்பு!

ஏ ஆர் ரஹ்மானை ‘Outdated’ என சொன்னாரா கவின்?- பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments