Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (13:52 IST)
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் நாளையும் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments