Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடகிழக்கு பருவ மழை: சென்னையை நோக்கி படையெடுக்கும் மழைமேக கூட்டங்கள்

chennai rain
, ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (11:54 IST)
வடகிழக்கு பருவ மழை: சென்னையை நோக்கி படையெடுக்கும் மழைமேக கூட்டங்கள்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிவிட்ட நிலையில் சென்னையை நோக்கி மழை மேக கூட்டங்கள் படையெடுத்து வரும் செயற்கைக்கோள் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
தென்னிந்தியாவில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனால் தமிழகம் உள்பட தென் இந்தியாவில் இன்னும் சில நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னையை நோக்கி மேகக்கூட்டங்கள் படையெடுக்கும் செயற்கைகோள் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்தது போல் மிக கனமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
வழக்கத்தை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகை கங்கனா ரனாவத்