Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (20:04 IST)
நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான்  பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு  நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தச் சம்பவத்திற்கு தெலுங்கு பவர் ஸ்டார் சிரஞ்சீவி இதற்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மன்சூர் அலிகானுக்கு இயக்குனர் பாரதிராஜாவும் கண்டனம் தெரிவித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,   நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில் நடிகை திரிஷா புகார் குறித்து   மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் –அஜித்குமார் பேட்டி!

ரெய்டு நடக்கும் ஹோட்டல்கள் என்னுடையவை இல்லை… நடிகர் ஆர்யா மறுப்பு!

வார நாட்களிலும் கணிசமான வசூல்.. வெற்றியை நோக்கி செல்லும் படை தலைவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments