Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை நிகழ்வுகளை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருப்பதாக அரவிந்த்சாமி காட்டம்

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2017 (17:10 IST)
தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை  சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது.

 
பேரவையில் ஜெயா தொலைக்காட்சி மட்டுமே அனுமதிக்கப்பட்டு மற்ற ஊடகங்கள் வெளியேற்றப்பட்டன. ஜெயா  தொலைக்காட்சியோ தங்களுக்கு சாதகமான காட்சிகளை மட்டும் துண்டுத்துண்டாக ஒளிபரப்பி வருகிறது. இதனால்  சட்டப்பேரவையில் உண்மையில் நடந்தது என்ன என்பது மக்களுக்கு தெரியவில்லை.
 
இது குறித்து நடிகர் அரவிந்த்சாமி காட்டமாக கருத்து கூறியுள்ளார்.
 
"மக்களுடைய உணர்வுகளை எம்.எல்.ஏக்கள் பிரதிபலிக்கவில்லை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை யாரும் ஏற்றுக் கொள்ள  மாட்டார்கள். இதற்கு மக்களை அவர்கள் சந்திக்க வேண்டும்இ விடுதியில் கட்சியினரை அல்ல.
 
ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் மட்டுமே  காட்டப்படுகின்றன. என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது" என்று தனது ட்விட்டர்  பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments