Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்தை முடித்து கொடுத்த ஹீரோ...

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (19:22 IST)
மணிரத்னம் தற்போது செக்க சிவந்த வானம் படத்தை இயக்கிவருகிறார். மணிரத்னம் இயக்கும் படங்கள் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று கோலிவுட்டில் பேச்சு உண்டு. 
 
இதனை தனது கடந்த 2 படங்கள் மூலம் (ஓகே கண்மணி, காற்று வெளியிடை) முறியடித்துள்ளார். தற்போது செக்க சிவந்த வானம் படத்தை அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என 4 ஹீரோக்களை வைத்து இயக்கி வருகிறார். 
 
இந்நிலையில் படத்தில் அரவிந்த் சாமி நடிக்க வேண்டிய காட்சிகள் முடிக்கப்பட்டுவிட்டதாம். இதுபற்றி அரவிந்த் சாமி தனது டுவிட்டர் கூறியுள்ளதாவது, செக்க சிவந்த வானம் படத்தில் எனது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 
 
மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணிபுரிவது இனம் புரியாத சந்தோஷம். ஒட்டுமொத்த படக்குழுவினரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். இப்படம் எனக்கு நிச்சயம் ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும் என எண்ணுகிறேன் என பதிவிட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments