Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை! பிரபல இயக்குனர் காட்டம்!

Webdunia
திங்கள், 4 மே 2020 (08:38 IST)
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் லாக்டவுன்கள் நீடித்துக் கொண்டேதான் இருக்கும் என தனது சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தன் படங்களுக்காக உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முகமாக அறியப்படுபவர் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். மேலும் இப்போது அவர் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாஜக தலைமையிலான அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனமும் செய்து வருகிறார். பாஜக ஆட்சியில் நடக்கும் கும்பல் தாக்குதல் குறித்து அவர் விமர்சிக்க அது வலதுசாரிகளால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் இப்போது மூன்றாவது முறையாக மத்திய அரசு லாக்டவுனை நீட்டித்துள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஊரடங்குகள் தொடர்ந்து கொண்டே தானிருக்கும்... அவை தளர்த்தப்பட போவதில்லை. அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை. பணமும் இல்லை. பொருளாதார அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கார்ப்பரேட்டுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு தீர்வைக் காண வேண்டிய நேரம் இது. அதற்கான முன்முயற்சி பிரதமரிடமிருந்து வர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

அனுராக் காஷ்யப்பின் இந்த கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதை பொருள் வழக்கு… நடிகர் கிருஷ்ணா தப்பியோட்டம்?

சிம்பு 50 படம் தாமதம்… மணிகண்டனை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments