Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களாக எதுவும் யோசிக்காதீர்கள்… தனது முடிவில் உறுதியாக இருக்கும் அமீர்கான்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (11:01 IST)
இந்திய சினிமாவில் சூப்பர் அமீர்கான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அமீர்கான் சில தினங்களுக்கு முன்னர் தனது 56 வது பிறந்தநாளைக் கொண்டாடினர். அவருக்கு பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், தனது சமூதளப் பக்கத்தில், தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி…நான் சமூகவலைதளங்கிலிருந்து விலகுகிறேன். இதுதான் எனது கடைசி டுவீட் எனக் கூறியிருந்தார்.

அமீர்கானின் இந்த முடிவு குறித்து பலரும் பல விதமாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். அமீர்கான் இனிமேல் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் இப்போது அமீர்கான் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘உங்கள் கற்பனைகளை எல்லாம் சேர்த்து பேசாதீர்கள். நான் இனிமேல் சமூக ஊடகங்களில் இருக்க மாட்டேன். ஆனால் ஊடகங்கள் மூலமாக என்னுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

கோட் பட பணிகளை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்த விஜய்… என்ன காரணம்?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் நயன்தாரா!

எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் நடிகை யார்?

திரைக்கதை உரிமை எங்களிடம் இருக்கிறது... ராமாயணம் ஷூட்டிங்கை நிறுத்திய தயாரிப்பாளர்

அடுத்த கட்டுரையில்
Show comments