Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு நடிகை கைது!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (07:58 IST)
போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு நடிகை கைது!
கடந்த சில மாதங்களாக திரையுலகில் போதை பொருள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை எடுத்ததில் இதுவரை ரியோசக்கரவர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
மேலும் ஒரு சில நடிகைகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் அவர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
பிரபல தொலைக்காட்சி நடிகை ப்ரீத்திகா சவுகான் என்பவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகை ப்ரீத்திகா சவுகான் போதை பொருள் வாங்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு எதிராக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்த கைது யார் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments