Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் மழையில் சிக்கி கொண்டாரா நடிகர் விஜய்? வாக்களிக்க வருவாரா?

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (08:43 IST)
நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து கிளம்பிய நிலையில் அவர் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் அதனால் அவர் வாக்களிக்க வருவதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற நிலையில் நேற்று அவர் ரஷ்யாவில் இருந்து ஓட்டு போடுவதற்காக கிளம்பியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சென்னை வந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி விஜய் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் துபாயில் பெய்து வரும் காண மழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர் இன்னும் துபாயில் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று விமான சேவையை பொருத்து விஜய் சென்னை வருவார் என்றும் காலதாமதமாக வந்தாலும் மாலை ஐந்து மணிக்குள் அவர் வந்துவிட்டால் கண்டிப்பாக தனது வாக்கை செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments