நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

Siva
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (08:18 IST)
காதல் என்ற படத்தில் நடித்த நடிகர் சுகுமார் மீது நடிகையை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த சுகுமார், சென்னை வடபழனி சேர்ந்த துணை நடிகை உடன் அறிமுகம் பெற்றார். ஏற்கனவே, துணை நடிகை கணவரை பிரிந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், சுகுமாரும் துணை நடிகையும் நெருக்கமாக பழகினர்.

மேலும் சுகுமார் தனது மனைவியை விவாகரத்து செய்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று துணை நடிகையிடம் ஆசை வார்த்தை கூறியதாகவும், அவரது பேச்சை நம்பி, சுகுமார் உடன் கணவன் மனைவி போல் வாழ்ந்ததாகவும் புறப்படுகிறது.

இந்த நிலையில், சில தினங்களாக, துணை நடிகையை சந்திப்பதை சுகுமார் தவித்ததாகவும், செல்போன் மூலம் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்த நடிகை காவல்துறையில் புகார் அளித்த நிலையில், சுகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சுகுமார் மீது நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை, தாழ்வு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், தலைமறைவாக உள்ள சுகுமாரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

அடுத்த கட்டுரையில்
Show comments