Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பில் நடிகர் ஜெய்க்குக் காயம்… மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (11:16 IST)
நடிகர் இப்போது சுந்தர் சி க்கு வில்லனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை 28 படத்தில் நடித்தவர்களில் கதாநாயகனாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர் ஜெய். அவர் நடித்த சுப்ரமண்யபுரம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டான நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அவர் விட்டதால் இப்போது சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் உள்ளார். அதனால் இப்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். அதைத் தவிர்த்து சுசீந்தரன் இயக்கும் இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. இதனால் இப்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு வில்லனாக நடிக்க ஜெய் சம்மதித்துள்ளாராம். இந்த படத்தை சுந்தர் சியே தயாரிக்கும் நிலையில் அவரின் உதவியாளர் பத்ரி இயக்கி வருகிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் ஜெய்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments