Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சௌந்தர்யா படத்தை தனுஷ் தயாரிக்கவில்லை : நடந்தது என்ன?

சௌந்தர்யா படத்தை தனுஷ் தயாரிக்கவில்லை : நடந்தது என்ன?

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (13:36 IST)
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள திரைப்படத்தை, நடிகர் தனுஷ் தயாரிக்கவில்லை என்பதும், அப்படத்திற்கு கலைப்புலி எஸ்.தானுதான் தயாரிப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.


 

 
சூப்பர்ஸ்டாரின் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா, சமீபத்தில் தனது கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை பிரிந்து வாழ்கிறார்.
 
இவர் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை இயக்கியிருந்தார். தற்போது அடுத்து ஒரு படம் இயக்குவதாக கூறப்பட்டது.  
 
அப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பு அனைத்தும் நடிகர் தனுஷ் என்று தகவல் வெளியானது. மேலும் அப்படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால், தனுஷ் அப்படத்தை தயாரிக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. மாறாக ரஜினியின் கபாலி படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணுதான் அப்படத்தின் தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது. இதை சௌந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்திலேயே பதிவு செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments