Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடல் அழகியை மிரட்டி ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (16:44 IST)
மாடல் அழகியை மிரட்டி ஆபாச படம் எடுத்த   நடிகர்  அனிருத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சார்க்கோப் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான பெண் மாடல் ஒருவருக்கு, வெப் சீரியல் தயாரிப்பாளர் யாஸ்மின் கான் என்பவருடன் அறிமுகமானது.

இவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, ஒரு வீட்டில் ஷூட்டிங் நடத்தப்பட்டது, அப்போது, மாடல் அழகியின் ஆடைகளை களையும்படி கூறியுள்ளனர். இதற்கு மாடல் அழகி மறுத்துள்ளார்.

பின்னர் யஷ்மினும் நடிகர் அனியருத்தும் அவரிடம் சமாதானம் பேசி, இது வெளி நாட்டில் தான் ரிலீஸாகும் என்று கூறி அவரை நடிக்க வைத்தனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்த வெப் சீரீஸ் இணையதளத்தில் வெளியானதும் அவரது உறவினர்கள் இதுகுறித்து மாடல் அழகியிடம் கூறவே அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், மாடல் அழகி போலீஸில் புகாரளித்தார். இதையடுத்து,  அனிருத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments