சுவையான சேமியா கேசரி செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சேமியா - 500 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
தண்ணீர் - 400 மி.லி.
நெய் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை:
 
* சேமியா, முந்திரிப்பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேகவிடவும். கட்டி விழாமல் இருக்க கைவிடாமல் கிளற வேண்டும்.
 
* சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரிபருப்பு,  திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும். 
 
பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.  சுவையான சேமியா கேசரி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?.. வாங்க பார்ப்போம்!..

முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

அடுத்த கட்டுரையில்
Show comments