மனீஷ் பாண்டேவை நான் நீக்கவில்லை… தேர்வாளர்கள்தான் – டேவிட் வார்னர் ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:49 IST)
சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டேவை தான் நீக்கவில்லை என்று அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

டெல்லிக்கு எதிரான கடைசி ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணி கையில் இருந்த வெற்றியைப் பரிகொடுத்து சூப்பர் ஓவரிலும் சொதப்பியது. இதனால் அந்த அணி கேப்டன் டேவிட் வார்னர் விமர்சனங்களுக்கு ஆளானார். அதில் முக்கியமானதாக அந்த அணியின் முன்னனி வீரர் மனிஷ் பாண்டேவை நீக்கியது.

அதுகுறித்து பேசிய வார்னர் ‘மனிஷ் பாண்டேவை நான் நீக்கவில்லை. அது கடினமான முடிவு. அந்த முடிவை தேர்வாளர்கள்தான் எடுத்தார்கள். எல்லா முடிவையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார். இதனால் அணிக் கேப்டனுக்கும் தேர்வாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறாரா பதிரானா? ஐஎல்டி20 போட்டியில் அசத்தல் பவுலிங்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments