Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இரண்டு போட்டிகள் ரத்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இரண்டு போட்டிகள் ரத்து
, திங்கள், 27 மே 2019 (07:23 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றன
 
இந்த நிலையில் நேற்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டு போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் மழை காரணமாக நேற்று நடைபெறவிருந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்ப்ட்டது. தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டது
 
இந்த நிலையில் இன்று வங்கதேசம் மற்றும் இந்தியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்தியா, இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி – மீண்டும் கம்பீர் vs அப்ரிடி !