Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம் – ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற யாஷ் அஸ்விணி !

Advertiesment
ஒலிம்பிக்
, ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (13:47 IST)
பிரேசிலில் நடக்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினி தேஸ்வால் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ரைஃபில் பிரிவில் இந்தியாவின் யாஷ் அஸ்வினி தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெறும் 9 ஆவது இந்திய வீராங்கனையாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஒலிம்பிக் தொடருக்கு இதுவரை அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டிலா, சவுரவ் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சம்போத், மனு பாகேர் ஆகிய 9 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி புறக்கணிக்கப்படுகிறாரா ? – மறுக்கும் தேர்வுக்குழு உறுப்பினர் !