Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி.. மே.இ.தீவுகள் அபாரம்..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (07:47 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  கடந்த 3ஆம் தேதி நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.  இந்தியாவின் திலக் வர்மா அரைசதம் அடித்தார்.
 
இதனையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மே.இ.தீவுகள் அணி விளையாடிய நிலையில் 18.5 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. நிக்கோலஸ் பூரன் மிக அபாரமாக விளையாடி 67 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.  
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்று விட்டால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments