Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பையிலும் சொதப்பல்.. 6 ரன்களில் அவுட்டான விராத் கோஹ்லி..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (11:23 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக சரியாக பேட்டிங் செய்யாத நிலையில் அவர் மீது கடுமையாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் அவர் ரஞ்சி கோப்பையில் விளையாட உள்ளார் என்ற செய்தி அறிந்ததும், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் அவரது ஆட்டத்தை பார்க்க விரும்பினார்கள். அவரது ஆட்டத்தை காண, நேற்று முதல் கூட்டம் குவிந்த நிலையில், அவர் 6 ரன்களில் அவுட் ஆனார். இதனால், ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ரயில்வே மற்றும் டெல்லி அணிகளுக்கான போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரயில்வே அணை 241 ரன்களில் அவுட் ஆனது. இதனை அடுத்து, விராட் கோலி இடம் பெற்ற டெல்லி அணி பேட்டிங் செய்த நிலையில், சங்வான் பந்துவீச்சில் விராத் கோஹ்லி 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனால், அவரது ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், டெல்லி அணி தற்போது நான்கு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் விளையாடும் போது பேட்டிங்கில் சொதப்பிய கோஹ்லி, தற்போது ரஞ்சி கோப்பையிலும் சொதப்பி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments